பவுண்டரி லைனில் கேட்ச் – புதிய விதி அமல்: எம்சிசி அறிவிப்பு
கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரி அருகில் நிற்கும் ஃபீல்டர்களின் கேட்ச் தொடர்பான முந்தைய விதியில் மாற்றம் செய்து, புதிய விதி ஒன்றை மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அறிமுகம் செய்துள்ளது. இதை விரிவாகப் பார்ப்போம்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பேஷ் லீக் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் நெசர் செய்த கேட்ச் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைந்துள்ளது. அந்தப் போட்டியில் பவுண்டரி லைனுக்கு அருகே நின்ற நெசர், பந்தை கேட்ச் செய்யும் போது இருமுறை களத்திற்குள் மற்றும் வெளியே சென்று பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இது விதி எண் 19.5.2-ன் அடிப்படையில் செல்லுபடியாக இருந்தது.
இப்போது, எம்சிசி புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இந்த விதி அமலுக்கு வந்த பின் மைக்கேல் நெசர் போல பவுண்டரி எல்லை வெளியே சென்று மீண்டும் பந்தை பிடிக்கும் செயல்முறை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதியின் சுருக்கம்:
- பவுண்டரி அருகில் ஃபீல்டர் பந்தை பிடிக்க முயற்சிக்கும்போது பேலன்ஸ் இழந்தால், பந்தை களத்துக்குள் வீசிவிட்டு பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லலாம்.
- ஆனால், மீண்டும் பந்தை பிடிக்கும்போது அந்த வீரர் பவுண்டரி லைனுக்குள் இருக்க வேண்டியது கட்டாயம்.
- இதேபோல் ‘ரிலே கேட்ச்’ செய்யும்போது, பவுண்டரி அருகில் உள்ள வீரர் பந்தை உள்ளே இருக்கும் மற்றொரு வீரருக்கு எறிந்தால், அதை பிடிக்கும் நேரத்தில் இரண்டு வீரர்களும் பவுண்டரி கோட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும்.
- இல்லையெனில் அந்த பந்து பவுண்டரியாகக் கணிக்கப்படும்.
இந்த மாற்றம் மூலம், ‘பன்னி ஹாப்’ எனப்படும் பந்தை காற்றில் எறிந்து பவுண்டரி களத்தில் உள்ளே/வெளியே சென்று பிடிக்கும் முறையினை முற்றிலுமாக நீக்குகிறது ஐசிசி.
இந்த புதிய விதி ஜூன் 17, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இதன் கீழ் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுற்றுக்குள் இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான டெஸ்ட் ஆகும். எம்சிசியின் விதி நூலில் இது அக்டோபர் மாதத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.