2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 சீசன், டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் மொத்தமாக 100 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து, வரலாற்றிலேயே அபூர்வமான சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதுவே இதுவரை பதிவான மிகப்பெரிய பார்வை எண்ணிக்கையாக ஜியோஸ்டார் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, முதல் முறையாக கோப்பையை வென்று தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியது. பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிரியாகக் கொண்ட இந்த போட்டி, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகம் பார்வையாளர்களைப் பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியை தொலைக்காட்சி மூலம் 16.9 கோடி பேர் பார்த்துள்ளனர்; அதே நேரத்தில் டிஜிட்டல் தளங்களில் 89.2 கோடி பார்வைகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக 16.74 பில்லியன் நிமிடங்கள் பார்வைக்கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஐபிஎல் சீசனுடன் ஒப்பிடுகையில், ஜியோஹாட்ஸ்டார் தளத்திற்கு இந்த ஆண்டில் 29% அதிக பார்வைகள் கிடைத்துள்ளன. மேலும், பெரிய திரை கொண்ட டிவிக்களில் ரசிகர்கள் அதிக அளவில் போட்டிகளை பார்த்தனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் நேரடி ஒளிபரப்புகளின் வழியாகவே 456 பில்லியன் நிமிடங்கள் பார்வைக்கிடைத்துள்ளன.
ஜியோஹாட்ஸ்டார், 2025 ஐபிஎல் சீசனுக்கான அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் பங்குதாரராக இருந்தது. அதன் மூலம், ஒரே சீசனில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்ததென தகவல்கள் வெளியாகியுள்ளன.