‘பந்து வீச்சு சொதப்பல்… பொறுமையாக இருங்கள்’ – கம்பீர் வேண்டுகோள்

0

371 ரன்கள் இலக்கை சவாலாக எடுத்த இங்கிலாந்து, 5-வது நாளில் அபாரமாக தேடி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆண்டர்சன்-சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய பந்துவீச்சு தரமற்றது என்பதை இந்த வெற்றியால் இங்கிலாந்து வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

இந்த தோல்வியின் பின்னணியில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரசிகர்களும் ஊடகங்களும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்திய அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் எந்தவொரு விக்கெட்டையும் பெறவில்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். அவர் 3 டெஸ்ட்களில் மட்டும் பங்கேற்கவுள்ளார் என்பதும் முக்கியமான சூழ்நிலை.

சிராஜ் மோசமாக பந்துவீசி அடி வாங்குகிறார். பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுத்தாலும், அதிக ரன்கள் கொடுப்பது கவலையைக் கிளப்புகிறது. சுழற்பந்துவீச்சில் தரமற்ற நிலைவும், ஜடேஜாவின் ஆற்றல் குறைவடைந்திருப்பதும் இன்னொரு சிக்கல். ஷர்துல் தாக்கூர் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும் விமர்சனங்கள் உள்ளன.

கேட்சிங் தரம் மிகவும் மோசமாக உள்ளது. அதேசமயம், பும்ரா கடைசி தருணங்களில் பந்துவீச அழைக்கப்படாததும் கேள்விகளை எழுப்புகிறது.

இந்த நிலைமையில் கம்பீர் கூறியதாவது:

“இந்த பவுலிங் அட்டாக்கில் பெரும்பாலான வீரர்களுக்கு டெஸ்ட் அனுபவம் குறைவாக உள்ளது. சிலர் புதியவர்கள். இவர்களுக்கு கால அவகாசம் தரப்பட வேண்டும். முன்பு 40 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் அனுபவம் கொண்ட வீரர்கள் இருந்தனர். இப்போது இல்லாமல் போனது யார fault என்பதைக் கூறுவது விட, அவர்களை வளர்க்கும் வேலை முக்கியம்.

டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சு வெறும் திறமை மட்டும் அல்ல; அனுபவமும் அவசியம். ஒவ்வொரு போட்டியிலும் தீர்ப்பு வழங்க முடியாது. திறமையை மதித்து இன்னும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். பும்ராவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவர் விளையாடும் டெஸ்ட்கள் முடிவு செய்யப்படும்.

பந்து வீச்சு அட்டாக் பலவீனமாக இருந்தாலும், நாங்கள் அவர்களை நம்புகிறோம். அவர்கள் படிப்படியாக மேம்படுவார்கள். இந்த முதல் டெஸ்ட்டிலும் நான்கு நாட்கள் நன்றாகவே விளையாடினோம். ஐந்தாம் நாளிலும் வாய்ப்பு இருந்தது. இந்த பவுலர்கள் எதிர்காலத்தில் வெற்றிகளைத் தருவார்கள்.”

ஷர்துல் குறைவாக பயன்படுத்தப்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் ஜடேஜா சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்ததால் அவ்வாறு நடந்தது. ஷர்துல் முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்காக அவரை விமர்சிப்பது சரியல்ல,” என கம்பீர் விளக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here