ஈ.சி.ஆர் சாலையில் இளம் பெண்களை சென்ற காரை துரத்திச் சென்று மிரட்டிய சம்பவம் தொடர்பாக காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுக கொடியுடன் சொகுசு காரில் வந்த சில இளைஞர்கள், இளம் பெண்களை ஏற்றிச் சென்ற காரை துரத்திச் சென்று மிரட்டிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலானதால்,
இது தொடர்பாக கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், கார்களின் பதிவு எண்களைப் பயன்படுத்தி போலீசார் விசாரித்தபோது, கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கார்கள் இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், கார்களைக் கைப்பற்றிய சிறப்பு காவல் குழு, காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் உட்பட 5 பேரைக் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர்.