நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் சீமானை நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு அவரது வீட்டில் சம்மன் ஒட்டியுள்ளனர். இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகாததால்,
சிறிது நேரத்திலேயே அவரது உதவியாளர் சம்மனை கிழித்து எறிந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்றனர். பாதுகாவலர் மற்றும் போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர் போலீஸ் வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.