அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்காக இணைக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முந்தைய ஆட்சியின் போது போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், செந்தில் பாலாஜி உட்பட 2000க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர்.
சென்னை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்காக இணைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்காக இணைக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
மார்ச் 13 ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.