WhatsApp Channel
பள்ளி வளாகத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர், ஜே.ஜே. நகரில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பள்ளி நிர்வாகங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பெற்றோர்களை அழைத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து பெற்றோர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post