WhatsApp Channel
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதும் அமைச்சராக தொடர்ந்தார். எந்த ஒரு இலாகாவும் இல்லாமல், எந்த இலக்கும் இல்லாமல் அமைச்சராக அவர் செயல்பட்டு வந்தார். இதையடுத்து 8 மாதங்களாக சிறையில் இருந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து முதல்வர் ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார். செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அமைச்சர் வெளியே வந்தால், சாட்சிகளை அழிப்பதற்காக, தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவார் என, அமலாக்கத் துறை, நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே ஜாமீன் மனு மீதான விசாரணையில் செந்தில்பாலாஜி தரப்பு வாதங்களை முன்வைக்கும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post