கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 157 பேர் 4 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதாவது கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தனர். அன்று இரவு முதல் பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதையடுத்து, கடந்த 19ம் தேதி முதல், பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற விளைவுகளை எதிர்கொண்டனர். இதையடுத்து, குடும்பத்தினர் அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பலர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பலர் தொடர்ந்து பலியாகின்றனர். நேற்று இரவு வரை மொத்தம் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 பேர் பலியாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மதன் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 159 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 107 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 17 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயருமா? என்ற அச்சம் உள்ளது
எனினும், சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் எப்படியாவது காப்பாற்ற அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சிகிச்சை அளிக்கும் பணியை முடுக்கி விடுகிறார். இதுதவிர கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post