பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொலை… 3 பைக்… அரிவாளுடன் 6 பேர்….!

0

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். நேற்று மாலை சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இந்த திடீர் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆம்ஸ்ட்ராங், ஜீரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த இயக்குனர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த படுகொலைக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சட்டம் ஒழுங்கை என்ன செய்வது? ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டால், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கைக் குறை சொல்லி என்ன பயன்? குற்றவாளிகளுக்கு கொல்லும் தைரியம் எப்படி வந்தது? குற்றங்கள் நடக்கும் இடத்தில் காவல்துறை, அரசு, சட்டம் என்றெல்லாம் பயப்படாத அளவுக்கு சட்டம் ஒழுங்கை நிலைகுலையச் செய்துள்ள திமுக முதல்வருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிவாளுடன் தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் நாட்டு வெடிபொருட்களையும் போலீசார் கண்டுபிடித்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் ரூபத்தில் வந்த மர்ம நபர்களே இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here