கன்யாகுமரியில் தொழில் அதிபரை தாக்கி 200 சவரன் நகை, பணம் திருடப்பட்டது.
வியானூரில் வசிக்கும் தொழில் அதிபர் மோகன்தாஸ், நிதி மற்றும் பெட்ரோல் நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஆர்த்தி, அட்சயா என்ற மகள்களும் உள்ளனர். அனிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது இளைய மகள் அச்சயா மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இந்நிலையில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து மோகன்தாசை கம்பியால் தாக்கி மகளை கத்தியை காட்டி மிரட்டி 200 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரொக்கம், செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். தகவலின் பேரில் போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.