போதைப்பொருள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது

0

சென்னை அருகே போதைப்பொருள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியைச் சுற்றியுள்ள விடுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், தனியார் கல்லூரியைச் சுற்றியுள்ள ஆண், பெண் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சோதனையில் போதைப் பொருள்கள், கஞ்சாவுக்குப் பயன்படுத்தக்கூடிய போதைப் பொருட்கள், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை பொலிஸார் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் ஆயிரம் பேர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். இதன்படி குடியிருப்பில் உள்ள 688 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 15 பேரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 15 பேரிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here