ஆவின் பால் ஏன்… தண்ணியா இருக்கு.. திமுக ஊழல் ஆட்சியில் கையும் களவுமாக சிக்கினார்

0

மதுரை ஆவினுக்கு அனுப்பப்படும் பால் கேன்களில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டு வருவதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தினசரி 1.20 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வருகிறது. மதுரை சாத்தமங்கலம் ஆவின் மூலமாக 1.93 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் தினமும் மதுரை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டம் கோப்பம்பட்டி பால் உற்பத்தி மையத்திலிருந்து ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்படும் பால் கேன்களில் ஓட்டுநர் தண்ணீரை கலப்படம் செய்யும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானது. அந்த பகுதியில் இருந்த ஆவின் விரிவாக்க அலுவலர் ஒரு வீரியமாக இதை வீடியோவில் பிடித்துள்ளார்.

அந்த அலுவலர், ஆவின் பால் பண்ணையில் நடைபெறும் பல விதமான முறைகேடுகள் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். வீடியோவில் ஆவின் வாகனங்கள் அதிக தூரத்திற்கு இயக்கப்படுவது, முகவர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பால் பாக்கெட்டுகளை திருடுவது, பால் டப்பாக்களை திருடுவது, உடைந்த பால் பாக்கெட்டுகளை திருப்பி தராமல் போவது போன்ற முறைகேடுகள் பதிவாகியுள்ளன.

மேலும், ஆவின் பால்பண்ணை லாரியிலிருந்து டீசல் திருடப்படுவது, பால் கேன்களில் தண்ணீர் கலப்படம் செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்பான முழு வீடியோக்களும் உரிய விளக்கத்துடன் பதிவிடப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால், தன்னிடம் நடவடிக்கை எடுத்து, தற்போது தனக்கான ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விதமான புகார்கள் தொடர்பாக பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல், ஊழல் செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும், முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த தன் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here