தமிழக காங்கிரஸ் துணைப் பொதுச்செயலாளர் சரவணன், முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கேட்டு கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தவேக மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய், சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தொடங்கியதில் இருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதாக கூறிய சரவணன், முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளித்து தமிழகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.