‘கூலி’ சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் விலை அதிகம்: ரஜினி ரசிகர்கள் புறக்கணிப்பு முடிவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய ‘கூலி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஒரு டிக்கெட் ரூ.400 வசூலிக்கப்படுவதால், கும்பகோணம் பகுதி ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடையுள்ளனர். விலையை குறைக்காவிட்டால் சிறப்புக் காட்சியை புறக்கணிப்பதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. கும்பகோணம் பகுதியில் மூன்று தியேட்டர்களில் இது வெளியாகவுள்ளது. ஆனால், சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட் விலை ரூ.190, ரூ.200 ஆக இருக்கவேண்டும் என்பதில் ரசிகர்கள் உறுதியாக உள்ளனர். ஆனால், ரூ.400 வசூல் செய்யப்பட்டதால் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் இன்பராஜ் தெரிவித்ததாவது: கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் ரசிகராக தங்களது சொந்த செலவில் பல நலத்திட்ட உதவிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். பெரும்பாலான ரசிகர்கள் வசதியற்றவர்களாக இருந்தாலும், ரஜினிகாந்துக்காக மட்டுமே அவர்கள் அன்பு காட்டி வருகிறார்கள். இதற்கிடையில், குறைந்த கட்டணத்துடன் சிறப்புக் காட்சி நடத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது என்பதில் அதிர்ச்சி உள்ளது.

வினியோகஸ்தர்கள் மட்டுமே கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்க அறிவுறுத்தியுள்ளனர் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மனமுடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இதனை கண்டித்து, மாநகரிலும் போஸ்டர்கள் மூலம் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில்,

  • ரஜினிகாந்த் வீட்டுக்கு புகார் தெரிவிப்பது,
  • தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளிடம் புகார் அனுப்புவது,
  • கட்டணத்தை குறைக்காவிட்டால் சிறப்புக் காட்சியை புறக்கணிப்பது

    என முடிவு செய்துள்ளதாக இன்பராஜ் தெரிவித்தார்.

Facebook Comments Box