“கடவுளை ஏமாற்ற முடியாது” – வைரலாகும் ஆர்த்தி ரவியின் இன்ஸ்டா பதிவு!

ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதில் அவர்,

“மற்றவர்களை ஏமாற்றலாம், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது” என எழுதியிருந்தார். ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய வேளையில் வந்த இந்த ஸ்டோரி பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் ரவி மோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். சென்னையில் நடந்த இந்த தொடக்க விழாவில் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, அதர்வா, ஜெனிலியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில், “எனது தோழி கெனிஷா எனக்கு கடவுள் அளித்த பரிசு” என்று ரவி மோகன் உருக்கமாக பேசியிருந்தார்.

இதற்கிடையில், நடிகர் ஜெயம் ரவி – தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில், பரஸ்பர ஒப்புதலுடன் மனைவியிடம் இருந்து பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்ததோடு, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுவும் தாக்கல் செய்தார்.

Facebook Comments Box