’லோகா’ வெற்றிக்கு பின்னால் ஓர் அபாயம்: ஜீத்து ஜோசப் பகிரும் ‘லாஜிக்’

‘லோகா’ வெற்றிக்கு பின்னால் இருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்வைத்து முன்னணி இயக்குநர் ஜீத்து ஜோசப் கருத்து ஒன்றை தெரிவித்தார். அவர் கூறியது:

“ஒரு திரைத்துறையில் வேறு வேறு ஜானரில் படங்கள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஜானரில் படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால், அனைவருமே அதே மாதிரி படம் பண்ண ஓடுகிறார்கள்.

இப்போது ‘லோகா’ பெரும் வெற்றியடைந்துள்ளது. அடுத்த அபாயம் என்னவென்றால், எல்லாரும் சூப்பர் ஹீரோ படம் பண்ணத் தொடங்கிவிடுவார்கள். அது சரியான வழி கிடையாது. ‘லோகா’ போல் ஒரு படம் பெரிய வெற்றி அடைந்த பிறகு, அடுத்த சவால் என்னவென்றால் வேறு ஜானரில் படங்கள் ட்ரை பண்ண வேண்டும். அவையும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என பார்க்க வேண்டும். நானும் அனைத்து விதமாக படங்களை இயக்கவே விரும்புகிறேன்” என்று ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஜீத்து ஜோசபின் இந்த கருத்துகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு, உண்மையான கருத்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்ததாக ‘மிராஜ்’ என்ற படம் வெளியாகவுள்ளது. தற்போது அவர் மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தையும் இயக்க தயாராகி வருகிறார்.

Facebook Comments Box