“கோர காட்சிகள் கதிகலங்க வைக்கின்றன” – ஜி.வி.பிரகாஷ் வேதனை
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பற்றிய தனது வேதனையை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:
“கோர காட்சிகள் மனதை கதிகலங்க வைக்கின்றன. யாருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், எப்படி சாந்தப்படுத்த வேண்டும் என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் ஆன்மாக்கள் இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
கரூரில் நடந்த இந்த சம்பவத்தில், குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் கரூர் மாநகரத்தை முழுமையாக கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.