சினிமாவுக்கு என் முழு உழைப்பையும் செலுத்துவேன்: விக்ரம் பிரபு
தமிழக அரசு 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. அதில், 2022-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருதை விக்ரம் பிரபு பெறவுள்ளார்.
இந்த விருதை பெற்றது குறித்து விக்ரம் பிரபு வெளியிட்ட அறிக்கையில், “2022-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் பெரும் பெருமையும் பணிவும் அடைகிறேன். இந்த அங்கீகாரத்திற்காக அரசு மற்றும் நடுவர் குழுவுக்கு மனமார்ந்த நன்றி.
என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் – உங்களின் இடையறாத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த அங்கீகாரம் என்னுடையதோடு உங்களுடையதும் ஆகும். சினிமா எனக்கு அளித்ததை மதித்து, இனிமேலும் அதற்காக என் முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.