நடிகர் மோகன்லாலுக்கு கேரள அரசு பாராட்டு விழா

தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு அக்டோபர் 4-ம் தேதி பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெறும் என கேரள அரசு அறிவித்துள்ளது. திரைத்துறையின் உயரிய விருது, தாதா சாகேப் பால்கே விருது செப்டம்பர் 23-ம் தேதி நடிகர் மோகன் லாலுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, மோகன் லாலை கௌரவிக்கும் வகையில் கேரள அரசு அக்டோபர் 4-ம் தேதி “மலையாளம் வனோலம், லால் சலாம்” என்ற பெயரில் பாராட்டு விழா நடத்துகிறது என்று கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். விழாவுக்கான லோகோவுமாக வெளியிடப்பட்டுள்ளது. “மலையாள சினிமாவிற்கு நடிகர் மோகன் லால் கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார்” என்று அமைச்சர் சாஜி செரியன் கூறினார்.

இந்நிகழ்வில் மலையாள நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்குப் பிறகு இந்த விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் நடத்தப்பட இருக்கிறது.

Facebook Comments Box