ஆப்பிரிக்க நாட்டில் மர்ம காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமீபத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி வடமேற்கு நகரமான போலோகோவில் இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் ஒரு மாதத்திற்குள், சுமார் 420 பேருக்கு காய்ச்சல் பரவியுள்ளது. அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். எனவே, இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.