WhatsApp Channel
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, 800 ஆண்டுகளுக்கு முன் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றிய அதே மண்டபத்தில் கம்பரின் ராமாயணத்தைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார். அனுபவத்தை விவரிப்பது கடினம்.
அந்த உணர்வு வேறொரு உலகம். இது எனக்கு “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்பதை நினைவூட்டியது என்று பிரதமர் மோடி கூறினார்.
அயோத்தி ராமர் கோவில் விழாவிற்கு செல்வதற்கு முன், நான் ஒரு சாதாரண மனிதனாக, ஸ்ரீராமர் தொடர்புடைய நாசிக், குருவாயூர், லெபக்ஷி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய கோவில்களுக்கு சென்று வந்தேன் என்று பிரதமர் மோடி கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் உரையை எக்ஸ் மேடையில் பகிர்ந்துள்ளார்.
Discussion about this post