மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்யாகுமரியில் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரியில் பிப்ரவரி 26 ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் பத்தாம் நாள் திருவிழாவையொட்டி மார்ச் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவைகள்/ஊழியர்களுக்குப் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை அல்ல என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.