நெல்லையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வணிகர் சங்கத்தின் சார்பாக கே.டி.சி.நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை நெல்லை கலெக்டர் சந்தோஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி நெல்லை மாவட்ட தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வான் மற்றும் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருச்செந்தூரில் உள்ள புனித அவதார பதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அம்மனை வழிபட்டார்.
அங்கு, மார்ச் 1, 1833 அன்று, கொல்லம் 1008 ஆம் ஆண்டு தமிழ் மாசி மாதத்தின் 20 ஆம் தேதியுடன் தொடர்புடையது, ஸ்ரீ மகா திருமால் அய்யா வைகுண்டராக அவதரித்தார், மனிதகுலத்தை பல நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றவும், சனாதன தர்மத்தையும் அதன் முக்கிய மதிப்பான உலகளாவிய சகோதரத்துவத்தையும் மீட்டெடுக்கவும் என்று அவர் தனது பதிவில் தெரிவித்தார்.
நாம் அனைவரும் சகோதர சகோதரிகளைப் போல மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் வாழவும், இந்தியாவை உலகத் தலைவராக மாற்ற ஒன்றிணைந்து பாடுபடவும் அய்யாவின் ஆசிகளைப் பெறுவோம் என்று அவர் கூறினார்.