காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 322 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவலின் படி, கடந்த 18 மாதங்களில் மொத்தம் 15,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 34,000க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது மிகுந்த கவலைக்குரியதாக அமைந்துள்ளது.
மக்கள்தொகையில் மிகப்பெரிய சதவீதம் குழந்தைகளாக உள்ள காசா பகுதியில், தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரிப்பது அவற்றின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. அத்துடன், மருத்துவ வசதிகள் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளும் குழந்தைகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே உள்ள தகவலின்படி, போர் காரணமாக மருத்துவமனைகள் முற்றிலும் செயலிழந்து வருகின்றன. குழந்தைகள் மட்டுமின்றி, பொதுமக்கள் பலரும் பாழடைந்த கட்டிடங்களுக்குள் சிக்கிக்கொண்டு, உதவியில்லாமல் உயிரிழக்கின்றனர்.
இதனால், சர்வதேச சமூகத்தின் உடனடி செயல்பாடு அவசியமானது. யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.