”தோல்வி பயத்தால் ஓட்டு பெட்டியை மாற்றி விடுவார்கள் என தி.மு.க.,வினர் , குற்றம் சாட்டுகின்றனர்,”… எல்.முருகன்

0
”தோல்வி பயத்தால் ஓட்டு பெட்டியை மாற்றி விடுவார்கள் என தி.மு.க.,வினர் , குற்றம் சாட்டுகின்றனர்,” என, பா.ஜ.க மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவரது மாமியார் வள்ளியம்மாள் மறைவுக்கு முருகன், மாநில பொதுசெயலர் ஸ்ரீனிவாசன் நேற்று ஆறுதல் கூறினர். ரவீந்திரநாத் எம்.பி., உடனிருந்தார்.பின் முருகன் கூறியதாவது:
 
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,- பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும். பா.ஜ.க 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கோவில் திருவிழாக்களை நடத்த கொரோனா விதிகளுக்கு உட்பட்டு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தி.மு.க.,வினர் தோல்வி பயத்தால் ஓட்டு பெட்டியை மாற்றி விடுவார்கள் என, குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here