மம்தா அரசின் ஊழலால் மேற்குவங்கத்தின் கலாச்சாரம்…. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அதிரடி பேச்சு

0

 

மம்தா அரசின் ஊழலால் மேற்குவங்கத்தின் கலாச்சாரம், வளர்ச்சி உள்ளிட்டவை சுரண்டப்பட்டுள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தலை முன்னிட்டு ‘மாற்றத்திற்கான பேரணி’ இன்று பிர்பூமில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்தப் பேரணியை துவக்கி வைத்த நட்டா பேசுகையில்,
கலாச்சாரம், வளர்ச்சி மற்றும் நாட்டிற்கான வழிகாட்டியாக அறியப்பட்ட மேற்குவங்கம், தற்போது மம்தா அரசாங்கத்தால் ஊழல் மூலம் சுரண்டப்பட்டுள்ளது. அதனால் உண்மையான மாற்றத்திற்கான பேரணியை தொடங்க பாஜக முடிவெடுத்துள்ளது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here