காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பல மாதங்களாக யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில், பல காஸா மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஃபாவில் உள்ள ஷாதி கேம்ப் மற்றும் தாபா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 42 பேர் கொல்லப்பட்டதாக காசா தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.