பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

0

பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தல்கள் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. 577 உறுப்பினர்களைக் கொண்ட பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தல் ஐரோப்பாவின் மிக முக்கியமான தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் இம்மானுவேலின் மையவாதக் கூட்டணி, வலதுசாரி தேசியப் பேரணிக் கூட்டணி, இடதுசாரி நியூ பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன. இதில், மரீன் லி பென் தலைமையிலான வலதுசாரி கூட்டணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பிரான்ஸில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. Jean-Luc Mélenchon இடதுசாரி கூட்டணியின் முக்கிய தலைவர். அதே நேரத்தில், இடதுசாரிகள் அதிக இடங்களைப் பெற்றாலும், நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியாது என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தொங்கு பாராளுமன்றம் உருவாகலாம்.

பிரெஞ்சு பிரதமர் கேப்ரியல் அட்டல், ஆளும் மத்தியவாதக் கூட்டணியின் தேர்தல் தோல்வியால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும், ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பிரான்சில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here