பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து கடவுள் தான் காப்பாற்றினார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு மில்வாக்கியில் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் கடைசி நாளான இன்று டிரம்ப் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து கடவுள் தான் காப்பாற்றினார் என்றும், அதிபர் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெறுவோம் என்றும் கூறினார்.
துப்பாக்கிச்சூடு குறித்து டிரம்ப் முதல்முறையாக பொதுவெளியில் பேசினார். துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டதால் டிரம்ப் காதில் பேண்டேஜ் அணிந்திருந்தார், மேலும் மாநாட்டில் இருந்த அவரது ஆதரவாளர்களும் காதில் பேண்டேஜ் அணிந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.