வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் நியமிக்க முடிவு

0

வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கிடையில், நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்ததால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். அத்துடன், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிஸை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வங்கதேச அதிபர் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸை நியமித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here