தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

0

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவை திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களும், இலங்கை கடற்படையினரும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி சூறையாடினர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here