காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம்

0

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் காவல்துறையும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் பட்னிடாப் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராணுவம், பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நேற்று அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். பின்னர், பல மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, பயங்கரவாதிகள் உதம்பூர் மாவட்டத்தின் வனப் பகுதிக்குள் தோடா மாவட்ட வனப் பகுதிக்குள் நுழைந்தனர். இதையடுத்து, இன்று காலை, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.

இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ராணுவ அதிகாரி (ராணுவ கேப்டன்) வீர மரணம் அடைந்தார்.

இதனிடையே பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய அதிநவீன துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here