மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்…

0

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான 33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்தன.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் இன்று பாரீசில் துவங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் பங்கேற்கின்றனர். உடல் குறைபாட்டின் அடிப்படையில் விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றன. 22 விளையாட்டுகளில் 549 பந்தயங்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் 32 பெண்கள் உட்பட 84 பேர் கொண்ட அணி உள்ளது. பாராலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த அவர்கள், வில்வித்தை, தடகளம், பூப்பந்து, சைக்கிள் ஓட்டுதல், ஜூடோ, பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, ரோயிங் மற்றும் கேனோயிங் ஆகிய 12 விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), துளசிமதி, மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீசிவன், சிவராஜன் சோலைமலை (4 பேட்மிண்டன்) மற்றும் கஸ்தூரி ராஜாமணி (பவர் லிஃப்டிங்) கலந்து கொள்ள உள்ளனர்.

இன்று இரவு 11.30 PM IST க்கு தொடங்கும் தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்களின் அணிவகுப்பு நடைபெறும். தொடக்க விழாவை 65 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளனர். முதல் நாள் திறப்பு விழா மட்டும் நடைபெறும். நாளை முதல் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்போர்ட்ஸ்18 சேனல் போட்டியை நேரடியாக ஒளிபரப்புகிறது. நீங்கள் ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here