ஃபார்முலா 4 கார் ரேஸ் பிரதான பந்தயம் சென்னையில் தொடக்கம்…

0

ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது.

இந்த ஆண்டுக்கான ஃபார்முலா 4 பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடைபெறும். 2வது சுற்று போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை தீவு திடலைச் சுற்றியுள்ள 3.5 கி.மீ., சாலை பந்தய ஓட்டப் பாதையாக மாற்றப்பட்டது. தெற்காசியாவிலேயே முதன்முறையாக வீதிச் சுற்றுவட்டத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரவும் பகலும் பிரகாசமாக ஜொலிக்கும் வகையில் இருபுறமும் விளக்கேற்றப்படும்.

நேற்று இரவு பார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை தகுதிச் சுற்று நடைபெற்றது.

இந்த நிலையில், பார்முலா 4 கார் பந்தயத்தின் முக்கிய பந்தயங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த கார் பந்தயத்தை நடிகர் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கண்டுகளிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here