ஹமாஸ் தலைவரின் மரணம்… இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

0

ஹமாஸ் தலைவரின் மரணச் செய்தியை பிணைக் கைதிகளாகக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பங்களுக்குத் தெரிவிக்குமாறு நெதன்யாகு தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சிலர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 42,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டுள்ளது. லெபனானைப் போலவே, அது இஸ்ரேலைத் தாக்குகிறது. இதனால், இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இதில், ஒருவர் பின் ஒருவராக பலர் பலியாகினர். ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.

அடுத்து, இஸ்ரேல் ஹிஸ்புல்லா தளபதி புவாட் ஷுகரை தாக்கி கொன்றது. கடந்த மாதம் 27ம் தேதி பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் கொன்றது. இஸ்ரேலிய இராணுவம் ஹிஸ்புல்லாவின் தடுப்பு மையத்தின் தளபதியும் அவர்களின் செயற்குழு உறுப்பினருமான நபில் கவாக்கைக் கொன்றது.

ஹனியேவின் மரணத்திற்குப் பிறகு, காசா பகுதியின் ஹமாஸ் தலைவர் பதவியிலிருந்து முழு ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக ஷின்வார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அது உறுதி செய்யப்படவில்லை.

ஹமாஸ் அமைப்பின் தலைவரும், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய புள்ளியுமான யஹ்யா ஷின்வார் இறந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதிப்படுத்தினார். இதனை டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தலைவரின் மரணச் செய்தியை பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பங்களுக்குத் தெரிவிக்குமாறு நெதன்யாகு தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார்.

முன்னதாக, காசாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட X சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளது. அவர்களில் யாஹ்யா சின்வாரும் ஒருவராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் சோதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சின்வாரின் மரணத்தை நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here