கோவை சிவானந்தா காலனியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கூட்டம் நடத்த முயன்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் முற்றுகையிட்டன.
கோவையில், திராவிடர் விடுதலைக் கழக உறுப்பினர்கள் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கூட்டங்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சிவானந்தா காலனியில் மீண்டும் கூட்டம் நடத்தவிருந்த திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர்.
இருப்பினும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. எனவே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் கூட்டம் நடத்த முயன்றபோது அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் பேச வந்த கொளத்தூர் மணியை முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து, கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ்குமார், விஸ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சிவராஜ், மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், தென் தமிழ்நாடு தர்ம யாத்திரை பொறுப்பாளர் சிவலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.