தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றி, துணிச்சலான துறவி விவேகானந்தருக்கு ஞானம் அளித்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்ட பதிவில், பாரதத்தின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவரான, பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதரித்த தினம் இன்று.
உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்டவர். இறைவன் ஒருவனே. அவனை அடைவதற்கான பல வழிகளே, வழிபாட்டு முறைகள் என்பதை, மக்களுக்குத் தெளிவுபடுத்தியவர். வீரத் துறவி விவேகானந்தருக்கு, ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்து ஞானம் வழங்கியவர்.
அனைத்து மதங்களும் இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை உணர்ந்து, ஒற்றுமையை வலியுறுத்திய பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை கூறினார்.