அய்யா வைகுண்டரின் அவதார நாளான 4 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்ட பதிவில், சமூகத்தில் சமத்துவமின்மை அகற்றப்பட வேண்டும் என்றும், சமத்துவமும் அமைதியும் நிலவ வேண்டும் என்றும் போதித்த அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினம் மார்ச் 4 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.
ஐயா வைகுண்டர் பக்தர்கள் அதிக அளவில் வசிக்கும் தென் மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்திலும், ஏற்கனவே அய்யா வைகுண்டரின் அவதார தினத்திற்கு விடுமுறை அறிவித்துள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அன்பையும் ஆன்மீகத்தையும் வலியுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று அய்யா வைகுண்டர் பக்தர்கள் சார்பாக அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அய்யா வைகுண்டர் அவதார தினம் – விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!