தொகுதி மறு வரையறை குறித்து திமுக ஏன் கூட்டம் நடத்தியது? – டிடிவி தினகரன் கேள்வி
மத்திய அரசு விகிதாசார அடிப்படையில் தொகுதி மறு வரையறை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த நிலையில், திமுக இதை எதிர்த்து கூட்டம் நடத்தியது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராமாவரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும், பொய்யான தகவல்களை பரப்பி மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறதாகவும் குற்றம் சாட்டினார்.
தொகுதி மறு வரையறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக விளக்கம் அளித்துவிட்ட நிலையில், தேவையில்லாத அரசியல் பேரணிகள் நடத்தி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவதை திமுக தொடர்வதற்கு காரணம் என்ன? என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது கடைகளில் நிலவும் ஊழல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகள், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று தினகரன் தெரிவித்தார்.