பாஜக மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தில் திமுக அரசை கண்டித்து தீர்மானங்கள்…

0

பாஜக மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. திமுக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாஜக மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மாளிகையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் 4000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், கள்ளக்குறிச்சியில் மது அருந்தி இறந்த பா.ஜ.,வினர் பங்காரு அடிகளார், எம்.எஸ்.சுவாமிநாதன், இளையராஜா மகள் பவதாரணி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் மதுபோதையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்கும் முதல் சிறப்பு செயற்குழு கூட்டம் என்பதால், இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள். கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here