100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரம் தயாரித்ததாக கூறப்படுகிறது.
மேலும், பிரகாஷுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக திரு.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் பலர் மீது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 40 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த திரு.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர். அவரை போலீசார் தமிழகம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.