தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும், தமிழக அரசின் மின்கட்டண உயர்வு சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
திறமையற்ற அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசின் மின் கட்டண உயர்வு சாமானிய மக்களை பாதிக்கும் என்றார்.