சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய திமுக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியதாக… அண்ணாமலை

0

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய திமுக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஆண்டு சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்றும், இந்த ஆண்டு முருகப்பெருமானுக்கு பிரம்மாண்ட விழா நடத்துவோம் என்றும் திமுகவினர் தெரிவித்தனர்.

சனாதன தர்மம் ஒழிப்பு மற்றும் முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டிலும் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பார் என்று கூறிய அண்ணாமலை, மக்களின் கோபத்துக்கு ஆளான திமுக நாடகத்தை மாற்றிக்கொண்டதாக குற்றம்சாட்டினார்.

திமுகவின் இந்த நாடகத்தை முருகப்பெருமான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here