தேர்தலை மனதில் வைத்து பெண்களுக்கு உரிய தொகை வழங்கப்படுகிறது… நயினார் நாகேந்திரன்

0

தேர்தலை மனதில் வைத்து பெண்களுக்கு உரிய தொகை வழங்கப்படுகிறது என பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் வஉசி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், திட்டங்களை விட, விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது, ஆரம்பத்திலேயே கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதிமுகவுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த நாயனார் நாகேந்திரன், அதிமுகவுடன் சமரசம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று கூறினார்.

கட்சியை யார் தொடங்கினாலும் மாநாட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அப்படி அனுமதி அளித்தால் இதுபோன்ற பிரச்னைகள் வராது என்றும் நாயனார் நாகேந்திரன் கூறினார். மாநாட்டுக்கு அனுமதி வழங்க 21 கேள்விகள் கேட்டதன் மூலம் திமுகவினர் விஜய்யை கண்டு பயப்படுவது போல் தெரிகிறது என்றும் நாயனார் நாகேந்திரன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here