மேச்சேரி பத்ரகாளியம்மன் | ஆடிப் பெருவிழாவும் அம்மன் அருளும்

சேலம் நகரத்திலிருந்து 32 கிலோமீட்டரும், மேட்டூர் அணையிலிருந்து 20 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ள இந்த புனித ஸ்தலம், பத்ரகாளியம்மன் கோயில் ஆகும். 800 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட இந்த கோயிலின் பிரதான நுழைவாயில், வடதிசையை நோக்கி ராஜகோபுரத்துடன் அற்புதமாக விளங்குகிறது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதில்கள் காணப்படுகின்றன; நான்கு திசைகளிலும் கோபுரம் பதிக்கப்பட்ட வாசல்கள் அமைந்துள்ளன.

அம்மன் இங்கு ருத்ர வடிவில் அருள்புரிகிறார். சூலம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், மனிதத் தலை, மணி மாலைகள் போன்ற ஆயுதங்களை தாங்கிய தண்டையணியுடன், பொன்சலங்கை அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

வலது காலைக் கூனிப் பதைத்து, இடது காலால் அசுரனை அழுத்தி வீரமாக அமர்ந்த அம்மன், மூக்கில் மின்னும் நாசி மோதிரத்துடனும், பவளமாய் ஒளிரும் சிறு சிரிப்புடனும், அக்னி சிரஸ்க்கிராசும், அழகிய குண்டலங்களுடனும் மேச்சேரியில் பத்ரகாளியாக அருள்புரிகிறாள்.

பத்ரகாளியம்மனைச் சாமி தரிசிக்கையில் 21 தலைமுறைக்குச் செய்த பாபங்கள், துக்கங்கள், நோய்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. ராகு-கேது தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்றவற்றுக்கு, ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நன்மை ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்விடத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறுகின்றன. வருடம் ஒருமுறை மாசி மாதத்தில் நடக்கும் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினங்களில் பூங்கரகம் எடுத்தல், அலகு குத்தல், தீக்குழியில் இறங்குதல், தீச்சட்டி தூக்குதல் போன்ற நேர்த்திக்கடன்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் அம்மனின் அருள் பெறும் பக்திப் பரவசமாக நடைபெறுகின்றன.

Facebook Comments Box