கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து கலந்து கொண்டனர்

மதுரையின் அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்டம் விமர்சனத்துடன் நடைபெற்றது. ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கூட்டு குரல் எழுந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தினமும் காலை தங்கச் சப்பரத்திலும் மாலை சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் மற்றும் குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார்.

9-வது நாளான நேற்று தேரோட்டம் விமரிசமாக நடந்தது. முதலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கருப்பணசாமி சந்நிதியில் உத்தரவு பெற்று காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் தீபம், தூப ஆராதனைகள் நடைபெற்றன.

காலை 8.40 மணிக்கு அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், அறநிலையத் துறை துணை ஆணையர் யக்ஞ நாராயணன் மற்றும் அறங்காவலர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற கூட்டு குரலுடன் தேர் இழுத்தனர். வழியெல்லாம் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் 11.55 மணிக்கு தேரோட்டம் முடிவுக்கு வந்தது. விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சிங்கா, மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்திற்காக மதுரை எஸ்.பி. அரவிந்த் தலைமையிலான 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். விழாவில் பங்கேற்க சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து பலர் பாரம்பரிய மாட்டு வண்டிகளில் வந்து கலந்து கொண்டனர்.

திருவிழா நாளை நிறைவு: மாலை நாட்களில் ஆண்டுதோறும் நடைபெறும் பதினெட்டாம் பதி பூஜை, தீபாராதனை, சந்தனம் சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் புஷ்ப பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். இன்று தீர்த்தவாரி பூஜை நடைபெறும். நாளை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவடையும்.

Facebook Comments Box