கெங்கையம்மனுக்கு 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே நெல்லி செட்டி தெருவில் உள்ள கெங்கையம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சி தருவது வழக்கம்.

முதல் வெள்ளிக்கிழமை பூக்கள், இரண்டாம் வெள்ளிக்கிழமை காய்கறிகள், மூன்றாம் வெள்ளிக்கிழமை பழங்கள், நான்காம் வெள்ளிக்கிழமை வெற்றிலைகள், ஐந்தாம் வெள்ளிக்கிழமை ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்கரித்து விழா கொண்டாடப்படும்.

இதன்படி, நேற்று ஐந்தாம் வெள்ளிக்கிழமையையொட்டி 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மன் கோயில் கருவறை அலங்கரிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து அம்மனை வழிபட்டனர்.

Facebook Comments Box