கடலூரில் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவின் 27-வது வைணவ மாநாடு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைந்த தனியார் மண்டபத்தில், ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 27-வது வைஷ்ணவ மாநாடு நேற்று நடைபெற்றது.

மாநாட்டை முன்னிட்டு கருடக் கொடியை கோ. லட்சுமண ராமானுஜ சுவாமி ஏற்றினார். அரவிந்தன் சுவாமி திருமால் வணக்கத்துடன் நிகழ்வை தொடங்கினார். சபா தலைவர் சே. ஸ்ரீதர் ராமானுஜ தாசன் வரவேற்புரையாற்றினார். பி.எஸ். வெங்கடேசன் பொருளாளர் ஆண்டறிக்கையை வாசித்தார்.

ஆன்மிக சொற்பொழிவுகள்:

மாநாட்டில் திருக்கோவிலூர் ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகள் தலைமை ஏற்று, மங்களாசாசனம் வழங்கினார். தொடர்ந்து,

  • ‘ஆகமத்தில் ஆனந்தன்’ – திருச்சி ஸ்ரீரங்கம் ராமன் பட்டாச்சாரியார் ஸ்வாமி
  • ‘திருநாம வைபவம்’ – திருவல்லிக்கேணி ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி
  • ‘கள்ளனும் குள்ளனும்’ – தூத்துக்குடி சடஜித் சுவாமி
  • ‘வைஷ்ணவ லக்ஷணம்’ – திருச்சி ஸ்ரீரங்கம் உ.வே. சாரதி தோத்தாரி ஸ்வாமி
  • ‘கொண்டாட்டம்’ – ஸ்ரீரங்கம் உ.வே. வகுளாபரணன் ஸ்வாமி

என்ற தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன.

சபா செயலாளர் இரா. இளங்கோவன் நன்றியுரை வழங்கினார். வளவதுரையன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். வைணவ பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

Facebook Comments Box