ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.14 கோடி வருவாய்
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1 கோடி 14 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய உண்டியல் எண்ணும் பணி, இரவு வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையேற்றார்.
கோயிலில் சுவாமி, அம்மன் மற்றும் பிற சன்னதிகள், துணை கோயில்களின் உண்டியல்கள் அனைத்தும் திறந்து கணக்கிடப்பட்டன. இதில் மொத்தமாக ரூ.1,14,65,707 ரொக்கம், 61 கிராம் தங்க நகைகள், 3 கிலோ 200 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Facebook Comments Box